Friday 16 March 2012

பங்குச்சந்தை முதலீடு - நீண்ட கால முதலீடு

சென்ற பகுதியில்  முதலீடு மற்றும் வர்த்தக முறைகள்   என்ன என்பது  பற்றி பார்த்தோம். இந்த பகுதியில் நீண்ட கால முதலீடு (LONG TERM INVESTMENT) பற்றி பார்ப்போம்.

நீண்ட கால முதலீடு (LONG-TERM INVESTMENT):
நீண்ட கால முதலீடு என்பது ஒரு நிறுவனத்தில் பங்கில் குறைந்தபட்சம் ஒரு ஆண்டுக்கு மேலாக முதலீடு செய்தால் அவற்றை நாம் நீண்டகால முதலீடு (LONG TERM INVESTMENT)  என்கிறோம்.


நாம் முதலீடு செய்யும்  நிறுவனம் வளர வளர நம்முடைய முதலீடும் வளரும், அதாவது நிறுவனம் வளர்ந்தால் சந்தையில் அதன் மதிப்பும் (விலை) ஏறும், எனவே முதலீட்டின் மதிப்பு நாளுக்கு நாள் பங்கின் சந்தை விலையைப் பொருத்து மாறுபடும். இவ்வகை முதலீட்டார்கள் குறைந்தபட்சம் ஒரு வருடத்திற்கு மேல், ஏன் ஒருசிலர் பத்து வருடம் கூட காத்திருப்பார்கள், இதன்மூலம் அந்த முதலீடு நல்ல லாபத்தை தரும். உதாரணமாக  Jubilant Foodworks Limited நிறுவன பங்கில் 08/02/2010 ல் ஒரு பங்குக்கு 160 ரூபாய் முதலீடு செய்திருந்தால் 15/03/2012 அன்று 1108.80 ரூபாய் கிடைத்திருக்கும் - யோசித்து பாருங்கள், கடந்த 2 வருடங்களில் ஏழு மடங்குக்கு மேல் வருமானம். இது தான் முதலீடு செய்வதில் இருக்கும் பயன். இப்படி வருடக்கணக்காக காத்திருக்க யாருக்கு பொறுமை இருக்கிறது என்று கேட்கிறீர்களா?? அப்படியானால் நீங்கள் மற்ற ஏதாவது ஒரு வர்த்தக முறையை தேர்ந்தெடுக்க வேண்டும்.


நீண்டகால அடிப்படையில் பங்குகளை வாங்குவதை முதலீடு என்று சொல்கிறோம். ஏனென்றால், அவர்கள் தன்னுடைய பணத்தை அந்த நிறுவனத்தின்ங்கில் முதலீடு செய்திருக்கிறார் அல்லது அந்த நிறுவனம் செய்யும் தொழிலில் பங்கெடுக்கிறார் என்று பொருள். எந்த ஒரு தொழிலை செய்வதாக இருந்தாலும் கொஞ்ச காலம் காத்திருக்க வேண்டும். அப்போதுதான் அந்த தொழிலில் இருந்து கிடைக்கும் லாபத்தை நாமும் பார்க்க முடியும்.

பங்கு சந்தையில் பணத்தை போடும் முன் சில அடிப்படை விஷயங்களை அறிந்துகொள்வது அவசியம். ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்குமுன் என்னென்ன விசயங்களை கவனிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்கும் முன் அந்த நிறுவனத்தை பற்றிய முக்கியமான விசயங்களை அறிந்து கொள்ள வேண்டும். அதற்குத்தான் செய்தித்தாள் மற்றும் பங்குச்சந்தை சம்மந்தப்பட்ட வலைத்தளங்களை பார்க்க வேண்டும்.

  • அந்த நிறுவனம் எந்த துறையில் இருக்கிறது.
  • அந்த துறையின் எதிர்கால வாய்ப்புக்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.
  • உதாரணமாககட்டமைப்பு (INFRASTRUCTURE), எரிசக்தி (POWER) மற்றும் நுகர்வோர் பொருட்களை தயாரிக்கும்/விற்கும் நிறுவனங்கள் (FMCG) என்று சொல்லப்படும்  துறைகளில் முதலீடு செய்வது அதிக பாதிப்புக்குள்ளாகாது என்று நம்பப்படுகிறது. 
  • இப்படி நிறுவனம் செய்யும் தொழில் மற்றும் அது இருக்கும் துறையை பற்றி தெரிந்தபின், குறிப்பிட்ட நிறுவனம் எப்படி செயல் படுகிறது என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். அதற்கு அந்த நிறுவனத்தின் நிதி விஷயங்களை நாம் கவனிக்க வேண்டும். அதாவது அந்த நிறுவனத்தின் வருடாந்திர லாப நஷ்ட கணக்கு (Profit and Loss Account) மற்றும் நிதிநிலை அறிக்கை (Balance Sheet) ஆகியவற்றைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும். அவற்றைப்பற்றி பின்வரும் பகுதிகளில் விரிவாகப்பார்ப்போம்.


நீண்டகால முதலீட்டை தவிர பிற இரண்டு வகையையும் வர்த்தகம் என்று சொல்கிறோம். ஆங்கிலத்தில் TRADING என்று சொல்கிறோம். இந்த வகையில் பங்கு சந்தையில் வர்த்தகம் செய்கிறவர்களின் ஒரே குறிக்கோள், விலை கூடியதும் இந்த பங்கை விற்று லாபம் பார்த்துவிட வேண்டும் என்பதுதான். இங்கே நாம் பங்கு வாங்கியிருக்கும் நிறுவனம் நல்லபடியாக தொழில் செய்யவேண்டும், அந்த நிறுவனம் லாபம் பார்க்க வேண்டும், அந்த லாபத்தின் மூலமாக நம்முடைய பங்கின் விலை கூட வேண்டும் போன்ற எதிர்பார்ப்புகள் எதுவுமே இல்லாமல், அப்போது இருக்கும் செய்தி மற்றும் சந்தை நிலவரத்தின் அடிப்படையில் லாபம் பார்க்கவேண்டும் என்பது மட்டுமே குறிக்கோள்.

அவற்றைப் பற்றி அடுத்த பகுதிகளில் விரிவாகப்பார்ப்போம்.

மேலும் பங்கு வர்த்தகம் குறித்த அனைத்து சந்தேகங்களுக்க்கும் pangusanthaiulagam@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.

இந்த வலைப்பக்கம் குறித்த தங்கள் கருத்துகளை COMMENT BOX இல் பதிவு செய்யவும்.

வலைப்பக்கம் பிடித்திருந்தால் FOLLOW செய்யவும்,, மற்றும் நண்பர்களுக்கு SHARE பண்ணவும்

No comments:

Post a Comment